பிறந்தநாள் வாழ்த்து .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  அவர்களின்  பிறந்தநாள் 16.013.2024..இன்று .இவரை அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி  பேரப்பிள்ளைகள்  தங்கை,
மச்சான் மார் மச்சாள் மார்  ம​ற்றும் 
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார்.நவற்கிரி அப்பா வயிரவர் மருகன்புலத்து வயிரவர் தோப்பு வயிரவர்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  எல்லாநலமும்  பெற்று தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 


செல்வச் செழிப்பையடைய லட்சுமி, குபேரர் மந்திரங்கள நாள் தோறும் கூற வேண்டும்

நாம் செல்வச் செழிப்பை அடைய அஷ்ட லட்சுமிகளை வணங்குதல் வேண்டும்.
 லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் உச்சரித்தல் அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும்.
 இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.
 மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
 மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். 
இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
 ஓம் அகத்தீசாய நம!
 ஓம் கரூவூர்தேவாய நம!
 ஓம் போகதேவாய நம!
 ஓம் கோரக்கதேவாய நம!
 அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று
 கூறுவர். இந்த
 சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். 
இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,
 ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாகவும்  நன்மைகள்
 கிடைக்குமாம் என்பதாகும்  



 

பிறந்த நாள் வாழ்த்து..திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 09.03.2024

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 
அவர்களின்  பிறந்தநாள் .09.03.2024..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
 இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பேரப்பிள்ளைகள் பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றனர் 
உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 






 

வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் வந்து சேர மகாலட்சுமியை இப்படி வணங்கிப்பாருங்கள்

உங்கள் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும். உயர்வான நிலையை அடைந்து, உயர்வான வாழ்க்கை வாழ 
வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவது உண்டு. இவை எல்லாம் கிடைப்பதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பது 
அனைவருக்கும் தெரியும்.
 ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் பெயர், புகழ், பணம், பதவி, செல்வம் கிடைத்து விடுமா? என்றால் கிடையாது என்று தான்
 சொல்ல வேண்டும். அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அனைவருக்கும் பணம், பெயர், புகழ் கிடைப்பது கிடையாது. பணம், பெயர்,
 புகழ் ஆகியவை கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அனுகிரக வேண்டும்.
 அப்படி லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சரியாக இருக்க வேண்டும். சுக்கிரனின் நிலை நன்றாக, பலத்துடன் இருந்தால் பணம் சேரும், சேமிப்பு உயரும், அனைத்தும் தேடி வரும், பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும்.
அதுவே சுக்கிரனின் நிலை சரியில்லை, அவர் பலம் இழந்த காணப்படுகிறார் என்றால் அதை சரி செய்ய சில எளிமையான, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யலாம்.
 ஏலக்காய் வாங்கி வந்து, ஒரு நூலில் மஞ்சள் தடவி, அதற்கு பிறகு 27, 51, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்து, தெய்வ மந்திரங்களை அல்லது நாமங்களை சொல்லி வணங்கிய படியே மாலையாக 
கோர்க்க வேண்டும்.
 இதை அப்படியே வைத்திருந்து, அடுத்த நாள் காலை, அருகில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாத்தலாம். அப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மர் படம் இருந்தால் அதில் சாத்தி வழிபடலாம். 
இந்த ஏலக்காய் மாலையை அடுத்த நாள் எடுத்து அதிலுள்ள ஏலக்காயை பிரசாதமாக சமையலில் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த 
ஏலக்காய் மாலையை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
 உங்களின் செல்வ நிலை செல்வாக்கு உயரும். தினமும் ஒரு ஏலக்காய் வீதம் எடுத்து, வெற்றிலை, பச்சை கற்பூரம், ஒரு நாணயம் வைத்து, அதை சுவாமி படத்திற்கு முன் வைத்து விட்டு, பச்சை கற்பூரம் கரைந்த பிறகு அந்த வெற்றிலை, ஏலக்காயை சேர்த்து சாப்பிடலாம். 
இதை தினமும் செய்து வந்தால் நரசிம்மரின் அருள் முழவதுமாக கிடைக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் 
ஏற்படும். ஏதாவது 
முக்கியமான காரியமாக வெளியில் செல்வதற்கு முன் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று விட்டு போய், அந்த காரியத்திற்காக பேசினால் அது வெற்றி அடையும்.என்பதாகும் 



புதிய டிஜிட்டல் உலகிற்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டுள்ள சைவசமய நடைமுறைகள்

நாடு முழுவதிலும் இருந்து 70 சாஸ்திர சம்பிராதாயங்களில் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்ட குழு, காசி வித்வாத் பரிஷித் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது. 
இந்த குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக பல ஆய்வுகள் செய்து, கலந்து ஆலோசித்த பிறகு புதிய நடைத்தை விதிகளை உருவாக்கி 
உள்ளனர். ஸ்ரீமத் பகவத் கீதா, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் 
அடிப்படையில் இந்த புதிய இந்து நடத்தை விதிகள்
 உருவாக்கப்பட்டுள்ளன.
 அனைத்து இந்துக் கோவில்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வழிபாட்டின் போது ஒற்றுமையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சில புதிய உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மாதவிலக்கு போன்ற சுத்தம் இல்லாத நாட்கள் தவிர்த்து,
 மற்ற காலங்களில் சில சடங்குகளையும் செய்வதுடன் வேதங்கள் படிக்கும் உரிமையும் புதிதாக வழங்கப்படுகிறது. இதனால் யாகங்கள் போன்ற சடங்குகளை இனி பெண்களும் செய்ய முடியும்.
 இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இரவில் திருமணம் செய்யாமல், பகலில் மட்டுமே திருமண சடங்குகளை
 நடத்தும் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கத்திய 
பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்களை சார்ந்த விஷயங்களை
 குறைத்து இந்திய மரபுகள், நம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஒருவரின் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டு 
நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
 விதவை மறுமணங்கள் ஊக்குவிக்கும் முறையும் இந்த புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தை கருத்தில் கொண்டு 16 வகையான சடங்குகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு இறுதிச் சடங்கில் கலந்த கொள்ள வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 16 ஆக
 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்த புதிய இந்து நடத்தை விதிகள் அச்சிடப்பட்டு, அந்த பிரதிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் மகாகும்பமேளாவில் புதிய இந்து நடத்தை விதிகளின் நகல்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2024..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள்
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் உறவுகள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்.
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து , நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன்.





ஆன்மீக பழக்கங்களில்நாம் நம்பிக்கை வைத்தால் நலனையே எதிர்பார்க்கலாம்

நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.
இதில் சில நம்பிக்கைகள்....
 நாம் வாங்கும் மளிகைப்பொருட்களில் உப்பை மாத்திரம் வெள்ளிக்கிழமை வாங்கினால் வீட்டில் செல்வம் செழிக்கும்.
அஷ்டமி, நவமிகளில் துளசிச் செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கி பின் நமது வெளிக்காரியங்களைச் செய்தால் 
அது கைகூடும்
 பௌர்ணமி, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் குத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டிலே மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
உப்பு, வெந்தயம், எள்ளு (கருப்பு) என்பவற்றின் சிறிய அளவை 
எடுத்திடித்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வீட்டின் 
தென்மேற்கு மூலையில் வைத்துவிட்டால் சேரவேண்டிய செல்வம் விரைவில் வந்து சேரும். இந்த வெள்ளைத்துணியை 48 நாட்களிற்கொரு 
முறை மாற்றிக் கொள்ளலாம். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 




 

நம் முன்னோர் பிள்ளையார் சுழியை ஏன் போடார்கள் அறிந்துடுவோம்

நம் முன்னோர் எதை எழுதினாலும் அங்கு தொடக்க பக்கத்தின் உச்சியில் ஒரு சுழியை இட்டிருப்பார்கள். அதென்ன என்று இக்காலத்தில் அவற்றை 
படிப்போர் கேட்கலாம். 
அதொன்றும் சும்மா சுழியல்ல பிள்ளையார் சுழி இந்த சுழியை வளைவு “வக்ரம்” என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால் அவரை “வக்ரதுண்டர்” என்றும் 
அழைப்பதுண்டு.
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை”  
 வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும் ஆனைமுகத்தானை வணங்குபவருக்கு
 கிடைக்கும்ன்னு சொல்வாங்க. இப்படி எதை செய்தாலும் ஆனைமுகத்தானை வணங்கி செய்வது நம் வழக்கம்.  ஆகையால் இந்த சுழியை தொடங்கும் எக்காரியத்திற்கும் இந்துக்கள் இடுவது வழக்கம்.
அந்த பழக்கம் செயலில் மட்டுமில்லை. எழுதுவதிலும் உண்டு. எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது வழக்கம். பிள்ளையார் சுழியை “உ” என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது.
விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை 
குறிக்கிறது. இதற்குள் பலவித உலகங்களும், வான் மண்டலமும் அடங்கியுள்ளது
. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.
 “உ” எனும் வட்டத்திற்குப் பிறகு ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், “ஆர்ஜவம்” என சொல்வர். இதற்கு
 “நேர்மை” எனப்பொருள். வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே என்பதே இந்த
 பிள்ளையார் சுழியின் தத்துவம். இவ்வுலகில் வாழும்
 அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி 
உணர்த்துகிறது. 
நாம் வாழும் டிஜிட்டல் உலகில் இந்த ”உ” எங்கேயிடுவது என்ற கேள்வி எழலாம். பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்க்கை நடைமுறையை பார்த்தால் தற்போது இது மறைந்துள்ளது என்றாலும் சாதனை படைத்தவர்களின் நடைமுறையில் இது அவரவர் பாவிக்கும்
 உபகரணங்களில் காணலாம்.
 அதேப்போல, வியாபாரத்தில் “உ” பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னு எழுதுவாங்க. இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள். முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார். எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.என்பதாகும் 




நீங்கள் அயோத்தி ராமர் பற்றி அறியாதவைகள் ஆச்சரியம் ஆனால் உண்மை

அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும். 
ஆலய வளாகம் 2.77ஏக்கர்கள். கோயிலின் நீளம் 380 அடிகள். அகலம் 250 அடிகள். உயரம் 161 அடிகள். கோயிலானது இந்திய நகர கட்டிடக் கலை பாணி இந்திய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது. 
கோயிலில் 392 தூண்கள் உள்ளது.44கதவுகள் உள்ளது. எல்லாம் சிற்பங்களுடன் செதுக்கள்களுடன் உள்ளது.இக்கோயில் நவீன காலம் மார்வலாக இருக்கும் .
உள்கட்ட அமைப்புகளை பார்க்கலாம்.
1.கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
2.குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
3.தீயணைப்பு சேவைகள் உள்ளது.
4.மின் நிலையம் உள்ளது.
5.யாத்திரிகர்களுக்கு மருத்துவ வசதிகள் உண்டு.
6.லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
7.25 ஆயிரம் பேர் யாத்திரிகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8.யாத்திரிகர்கள் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
9.நிறைய வாஷ்பேஷின்கள் உண்டு.
10.தனித்தனியாக குழாய் வசதிகள்.
11.இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்200 KW.கட்டிடம் முழுவதும் வைக்கப்படும்.
12.ராமர் /ராமாயணம் தொடர்பான கலைப் பொருட்கள் மற்றும் நூல்களுடன். அருங்காட்சியகமும் உள்ளது.என்பதாகும்




 


 

Powered by Blogger.